போர் காரணமாக உக்ரனின் 150 பாரம்பரிய தளங்கள் அழிக்கப்பட்டதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 3 மாதங்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி போரை ஊக்குவித்து வருகின்றதாக சீனா, ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் அமெரிக்கா போரை நிறுத்த விரும்பாமல் ஆயுதங்களை வழங்கி ஊக்கிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், உக்ரைனின் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டதாக யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோ, அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள், தேவாலயங்கள், மதம் சார்ந்த கட்டடங்கள், நூலகங்கள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டதாகவும், எந்த சூழ்நிலையிலும் கலாச்சாரம் சார்ந்த தளங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என தெரிவித்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…