மெக்டொனால்டு நிறுவனத்தை ரஷ்யா கையகப்படுத்தியதை அடுத்து தனது புதிய லோகோவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 106வது நாளாக போர் நடத்தி வருகிறது. பல்வேறு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவில் செயல்பட்டு வரும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியுள்ளன. இதையடுத்து ரஷ்யா அதிபர் புதின் " இங்கிருந்து வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் வருத்தப்படுவார்கள் என்றும், சுயமாக முடிவெடுக்க முடியாத வக்கத்த நாடுகளின் வெளிப்பாடே இது என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து மெக்டொனால்டு வெளியேறியதை அடுத்து அந்நிறுவனத்தை ரஷ்யா கையகப்படுத்தியது. தற்போது மெக்டொனால்டு நிறுவனம் தனது புதிய லோகோவை வெளியிட்டது. புதிய லோகோவில் ஒரு வட்டம் மற்றும் இரண்டு கோடுகள் உள்ளன, அவை ஒரு பர்கர் மற்றும் இரண்டு பிரஞ்சு பொரியல்களைக் குறிப்பதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…