உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் நைட்ரிக் ஆசிட் டேங்க் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் செவெரோ டோனெட்ஸ்க் நகரின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்யப் படைகள் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு உக்ரைனின் செவெரோ டோனெட்ஸ்கின் பெரும்பகுதியை ரஷ்ய துருப்புக்கள் கட்டுப்படுத்தியுள்ளதாக லுகான்ஸ்க் ஆளுநர் செர்ஜி கெய்டே தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலால் நைட்ரிக் ஆசிட் டேங்க் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் காவி நிறப்புகை விண்ணை முட்ட மேலெழும்பியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…