தென்கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அப்பிராந்திய ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரனில் 150 நாளை கடந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக உக்ரேனிய மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும் அகதிகளாக தஞ்சமடைந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்தது. மேலும் உக்ரைன் போர் காரணமாக உலகளவிலான செயற்கை உணவு பஞ்சம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஐநா தெர்வித்தது.
இந்நிலையில், தென்கிழக்கு உக்ரைன் நகரமான, டினிப்ரோ நகரின் மீது ரஷ்யா கப்பல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் குறைந்தபட்சம் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அப்பிராந்திய ஆளுநர் தெரிவித்தார். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…