உக்ரைன் அரசு வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனெடிக்டோவா என்பவர் திங்கள்கிழமை நிலவரப்படி ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுமார் 13,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு சமாதி கட்ட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் மேற்கத்திய நாடுகளில் உக்ரைனுக்கு ஆதரவாக நவீன ஆயுதங்களை வழங்கி போரை ஊக்குவித்து வருகிறது. இருந்த போதிலும் இரண்டு தரப்பினருக்கு கனிசமாக இழப்புகள் ஏற்ப்பட்டுள்ளதாக பாதுகாப்பு சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராணுவ நடவடிக்கை என்றாலே, பாலியல் குற்றச்சாட்டு எழுவது வழக்கமான ஒன்று, அந்த வகையில் தற்போது ரஷ்யா வீரர்கள் மீது உக்ரைன் அதிபர் போர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ரஷ்யா வீரர்கள் ஆயுதங்கள் இல்லாமல் இருக்கும் பொதுமக்களை குறிவைத்து கொண்று குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் ரஷ்யா இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியபோது, ரஷ்ய வீரர் வாடிம் சிஷிமரின் என்பவர் சாலையில் ஆயுதம் இல்லாமல் சென்ற ஒருவரை சுட்டுக்கொன்றார். இந்த போர் குற்றம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் அவர் குற்றத்தை ஒப்புகொண்டு, இறந்தவரின் மனைவியிடம் மன்னிப்பும் கேட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உக்ரைன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் ரஷ்யாவின் போர்க்குற்றம் தொடர்பாக 13,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் நாட்டின் அரசு வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனெடிக்டோவா தெரிவித்துள்ளார். ரஷ்யா படைகளிடமும் உக்ரைன் வீரர்கள் கைதிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…