அமெரிக்காவின், இந்தியானாவைச் சேர்ந்த தனிப்பட்ட பயிற்சியாளரான 39 வயதான சாரா நிக்கோல், தனது கணவர் ரியான் (38) உடன் ஆறு ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து இறுதியாக மார்ச் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் கடந்த ஆண்டு 40 வயதான ரோனியுடன் கடந்த ஆண்டு மீண்டும் இணைத்துள்ளார்.
இதனை polyamorous relationship என்று அழைக்கின்றனர். அதாவது ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதைத் தான் அப்படி கூறுகின்றனர். ரியானுடன் பழக்கத்தில் இருந்து திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகளுக்கு தன்னுடைய நண்பரான ரோனியை சந்தித்தார் சாரா. இதில் சாராவுக்கு polyamorous relationship இருக்க வேண்டும் என்று ஆசை உள்ளதாம். பின்னர் ரோனியும் அதை விரும்பியுள்ளார் என்பதை தெரிந்துகொண்ட சாரா, ரியானுடன் அவரை சந்தித்துள்ளார்.
அந்த சந்திப்பில் ரோனி மற்றும் சாராவின் நடவடிக்கைகள் நண்பர்களை தாண்டி இருப்பதை ரியான் உணர்ந்துள்ளார். இருப்பினும் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. பின்னர் ரோனி ஏன் நாம் polyamorous relationship இல் இருக்க கூடாது என்று பரிந்துரைத்துள்ளார். உடனே சாரா இது பற்றி கணவருடன் உரையாட, தன்னுடைய மனைவிக்கு முழு ஆதரவையும் தந்துள்ளார் ரியான். இதன் காரணமாக ரோனி, சாரா ரியான் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் உடன் வாழ ஆரம்பித்துள்ளார்.
இந்த மாதிரியான ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும் என்பதால், என்னுடைய குழந்தைகளுக்கு இது பற்றிய விளக்கத்தை அளித்துள்ளேன். இப்போது என்னுடைய குழந்தைகள், கணவன், காதலன் என்று அனைவருடனும் நான் ஆனந்தமாக இருக்கிறேன் என்றுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…