12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6,718 பேர் வறுமை, குடும்ப சூழல், பொருளாதார சூழல் மற்றும் உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர்கல்வியைத் தொடரவில்லை என்பதை பள்ளிக் கல்வித்துறை கண்டறிந்துள்ளது.
இதையடுத்து உயர்கல்வி செல்லாத மாணவர்கள் உயர்கல்வி தொடங்குவதற்கு ஏதுவாக வரும் 20 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…