தெலங்கானா மாநிலத்தில் எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி முதல்வரின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வரும் எல்கேஜி சிறுமிக்கு, அந்த பள்ளி முதல்வரின் கார் டிரைவாக உள்ள ரஜினிகுமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இரண்டு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், சிறுமியின் பெற்றோருக்கு இது தெரியவந்துள்ளது. அவர்கள், பள்ளிக்கு வந்து ரஜினிகுமாரை சரமாரியாக தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். அதன் படி, அந்த டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…