தேனி அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவன் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த சந்துரு என்ற மாணவன், உத்தமபாளையம் அடுகே உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று 11ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருவதால், தேர்வுக்காக காலையில், தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது உத்தமபாளையத்தில் இருந்து ராயப்பன்பட்டி செல்லும் வழியில் புறவழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதி சம்பவ இடத்திலையே துடிதுடிக்க பலியானர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…