தமிழகத்தில் 1 முதல் 9 வகுப்பு வரை திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்ச்ர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்; முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தீர்வு காணப்படுவதாக தெரிவித்தார். மேலும் திருச்சியில் பெறப்பட்ட மனுக்களுக்கு திர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் திட்டமிட்டப்படி 1 முதல் 10ம் வகுப்பு வரை வரும் 13ம் தேதியும், 12ம் வகுப்புக்கு 20ம் தேதியும் 11ம் வகுப்புகு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…