தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்றைய தினம் கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் 20 அடி உயரம் வரை எழும்பியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெப்பம் தனிந்து இதமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
கோடை விடுமுறை என்பதால் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் ஆபத்தை பொருட்படுத்தமால், கடலில் கால் நனைத்து விளையாடி வருவதாக அங்குள்ளவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன் அந்த பகுதியில் ஏராளமானவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…