சென்னையில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள `ஹவாலா' பணம் பிடிபட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலிருந்து நேற்று (ஜூன் 5) சார்ஜா சென்ற விமானத்தில் பயணிக்க வந்த சந்தேக நபரை பிடித்து, விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது, அவரது பையில் `ஹவாலா' பரிவர்த்தனைக்காக வைத்திருந்த ரூ.97.46 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் சிக்கின. இதேபோல், இன்று (ஜூன் 6) துபாய் செல்வதற்காக வந்த மற்றொருவரிடம், ரூ.17.68 லட்சம் மதிப்புள்ள `ஹவாலா' பணம் பிடிபட்டது. பிடிபட்டவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…