சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏரளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் சிலர் கஞ்சா விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகந்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திரவைச் சேர்ந்த கண்ணம் ராயுடு என்றும், அவன் கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவனை கைது செய்தது போலீசார் அவனிடம் இருந்த 9 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…