பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 374.72 புள்ளிகள் குறைந்து 52,471.98 புள்ளிகளாக வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100.15 புள்ளிகள் சரிந்து 15,674.25 புள்ளிகளாக வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த எல்ஐசி பங்குகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனைதொடர்ந்து ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து 78.02 காசுகளாக வர்த்தகமாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…