விஜயகாந்துக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவரது உடலில் இருந்து 3 விரல்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜய்காந்த் அவதிப்பட்டு வந்தார். தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது வெளியான தகவ்லின் படி, விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றியுள்ளார்களாம். தற்போது சிகிச்சைக்கு பின் அவர் நலமாக தற்போது கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்து இருகின்றனர். மேலும், விஜயகாந்த் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…