தட்டிக்கேட்ட தாயை கொலை செய்த சிறுவன் தங்கையையும் மிரட்டி வந்த நிலையில் போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர்.
லக்னோவில் 16 வயது சிறுவன், PUBG கேம் விளையாடுவதற்கு அடிமை ஆகியுள்ளார். இதை இவரது தாய் எதிர்த்துக் கண்டித்துள்ளார். இந்நிலையில், தனது தந்தையின் ரிவால்வரால் தனது தாயைச் சுட்டுக் கொன்ற சிறுவன், உடலை 2 நாட்கள் மறைத்து வைத்துவிட்டுத் தான் செய்த குற்றத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று தங்கையை மிரட்டி வந்துள்ளான். மேலும் வீட்டிற்கு வந்த எலெக்ட்ரீசியன் தான் தனது தாயை கொலை செய்ததாக போலீசாரை திசை திருப்ப முயற்சி செய்த நிலையில், போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் சிறுவன் உணமையை உளறத் தொடங்கினான். இதையடுத்து, இச்சிறுவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…