Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளி மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி!!

Sekar September 29, 2022 & 11:30 [IST]
பள்ளி மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி!!Representative Image.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல், இந்த ஆண்டு காலாண்டுத் தேர்வை மாவட்ட அளவில் நடத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. எனினும் செப்டம்பர் இறுதிக்குள் தேர்வுகளை முடித்துக் கொள்ள அறிவிருத்தியிருந்தது.

இதையடுத்து மாநிலம் முழுவது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மட்டும், ஆசியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திறன் பயிற்சி வழங்குவதால் 9 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை அடுத்து தற்போது மாணவர்களுக்கு விடுமுறையை நீடித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும், தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்