Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ்நாட்டில் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள்!

Bala June 03, 2022 & 16:58 [IST]
தமிழ்நாட்டில் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள்!Representative Image.

கால தாமதம் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 2022-2023ம் கல்வியாண்டிற்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, மாநிலமெங்கும் 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பதும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவதா.? என பள்ளிக் கல்வித்துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கால தாமதம் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்