சொமேட்டோ நிறுவனம் கெட்டுப்போன கறியை கொடுத்ததாக சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் , ஆர்.ஆர்.பிரியஆணி கடைக்கு சொந்தமான குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி; குடோனில் இருந்த கறியை நாங்கள் சோதனை செய்ததில் அவை கெட்டுப்போன கறி என தெரியவந்துள்ளது. மேலும் கறியில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தார். மேலும் கறியை கைப்பற்றி ஆய்வு கூடத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர் ஒருவர், யார் இந்த புகார் அளித்தார்கள் என்றும் சொமோட்டோ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்றார். இதற்கு பதிலளித்த அதிகாரி, ஆர்.ஆர். பிரியஆணி கடை உரிமையாளர் சொமோட்டோ நிறுவனம் கெட்டுப்பொன கறியை சப்ளை செய்ததாக புகார் அளித்ததாகவும் அதன் அடைப்படையில் தான் சோதனை செய்யப்பட்டதாக கூறிய அவர், இது தொடர்பாக சொமோட்டோ நிறுவனம் உரிய பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த சோதனைகள் ட்ரைலர் தான் என்றும் இன்னும் வருங்காலங்களில் ரெய்டுகள் தீவிரமாகவும் என தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…