சர் தாம் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் தலம் இந்துக்கள் மத்திய மிக பிரபலமாக அறியப்படும் ஆன்மிக தளமாகும். இமயமலையின் கர்வால் மலைத்தொடர்களில் கடல்மட்டத்திலிருந்து 3584மீ உயரத்தில் இந்த கேதார்நாத் கோயில் ஸ்தலம் அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் இந்த ஸ்தலத்துக்கு ஏராளமான யாத்ரீகர்கள் சிவபெருமானை வழிபட வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இங்கு வரும் பக்தர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் 39 பக்கதர்களும் யாத்திரையின்போது உயிரிழந்தனர். உடல்நலம் குன்றியவர்கள் சர் தாம் யாத்திரை மேற்கொள்ள முன்வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…