இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கையில் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் அனைவரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் அடுத்த ஓரிரு தினங்களில் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…