சென்னையில் இன்று மதியம் பெய்த திடீா் மழையால் 10க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்றும் , நாளையும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மதியம் பெய்த கனமழையால், சென்னை விமன நிலையத்திற்கு விசாகப்பட்டிணத்திலிருந்து வந்த விமானம், தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பிச் சென்றது. இதேபோல் கொச்சி, மதுரையில் இருந்து வந்த விமானங்கள் தாமதமாக தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…