Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிர்ச்சி.. மூன்று இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!!

Sekar October 20, 2022 & 16:23 [IST]
அதிர்ச்சி.. மூன்று இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!!Representative Image.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அருள் (36), அய்யப்பன் (30), சுந்தரம் (26) ஆகிய மூன்று பேர் நேற்று காலை கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை தங்கள் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களும் படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்