Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

படிப்பில் மகளை முந்திய சக மாணவன்.. விஷம் வைத்த பெற்றோர்?

Sekar September 03, 2022 & 16:13 [IST]
படிப்பில் மகளை முந்திய சக மாணவன்.. விஷம் வைத்த பெற்றோர்?Representative Image.

படிப்பில் தன் மகளை முந்தியதால் கோபமடைந்த பெற்றோர், தமது மகளின் சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மகன் பால மணிகண்டன், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

சம்பவம் நடந்த அன்று ஆண்டு விழா ஒத்திகையில் ஈடுபட்டு விட்டு, வீடு திரும்பிய பால மணிகண்டனுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது பள்ளியின் காவலாளி குளிர்பானம் கொடுத்ததாக கூற, உடனே பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். 

தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது மாணவனுடன் படிக்கும் சக மாணவியின் பெற்றோர் குளிர்பானம் தருவது தெரியவந்தது. தன் மகளை விட படிப்பில் கெட்டிக்காரனாக பால மணிகண்டன் இருந்ததால் பொறாமையில் சகாயராணி விக்டோரியா என்ற பெண் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

மாணவனுக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சகாயராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பால மணிகண்டன் பெற்றோர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்