10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மானவர்களை அடுத்து வரும் துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. அதில் 25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்த நிலையில், 1,95,292 பேர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும், 2,25,534 பேர் 10-ம் வகுப்பு தேர்விலும், 2,58,641 பேர் 11-ம் வகுப்பு தேர்விலும் என்று 6,79,467 பேர் தேர்வு எழுத செல்லவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மாணவர்களை அடுத்து வரும் துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…