உலக அளவில் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் தடை பட்டதால் பயனர்கள் கடும் அவதியடைந்தனர்.
நேற்று மதியம் 12.45 மணி நிலவரப்படி , டெல்லி , ஜெய்ப்பூர் , லக்னோ , மும்பை , பெங்களூரு மற்றும் பல முக்கிய நகரங்களில் இன்ஸ்டாகிராம் பக்கம் பல பயனர்களுக்கு செயல்படவில்லை என்று புகார் எழுந்தது . பெரும்பாலான பயனர்களுக்கு முகப்பு பக்கம் மற்றும் தங்களது சுயவிவரக்குறிப்பு பக்கம் தெரியவில்லை என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர் .
முன்னதாக , நேற்று காலை 9.45 மணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழக்க தொடங்கியதாகக் கூறப்படுகிறது , அதன் பின்னர் , ஒரு மணிநேரத்திற்கு அதிகமான மக்கள் இன்ஸ்டா பக்கம் இயங்கவில்லை என்று தெரியவந்துள்ளது .
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…