பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் அமைந்துள்ள தசரா மைதானத்தில் கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த கண்காட்சியில் ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தன. அதில் குறிப்பாக சுழன்று கொண்டு சுத்தும் ராட்சச ராட்டினம் ஒன்றும் இருந்தது. அந்த சுழலும் ராட்டினத்தில் குழந்தைகள் உட்பட மொத்தம் 50 பேர் இருந்துள்ளனர்.
50 அடி உயரத்தில் சுழன்றுக் கொண்டிருந்த ராட்டினம் தீடிரென எதிர்பாராத விதமான பலத்த சத்தத்துடன் கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 16 குழந்தைகள் வரை பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சோக சம்பவத்தை அடுத்து, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்த அமைப்பாளர் மற்றும் ராட்டின உரிமையாளர் மீது மொகாலி போலீசில் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய போலீஸ் அதிகாரி ராஜேஷ், தவறை செய்தவர்கள் யாராக இருந்தாலும், தப்பிக்க முடியாது. கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…