Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புத்தகங்களுக்கு பதில் பட்டாக்கத்தி....சென்னையில் மீண்டும் ரூட்டு தல...!

Bala May 16, 2022 & 14:52 [IST]
புத்தகங்களுக்கு பதில் பட்டாக்கத்தி....சென்னையில் மீண்டும் ரூட்டு தல...!Representative Image.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவுகளாக சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
 
சென்னை மக்களுக்கு மழை, வெள்ளத்தை தாண்டி பெரும் தலைவலியாக இருப்பது ரூட்டு தல பிரச்சனை. பஸ் தினம் என்ற பெயரில் பேருந்தை கவிழுக்கும் படியான சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்ததால், பேருந்து தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. அதேபோல் ரூட் தல பிரச்சனை மீண்டும் தலை தூக்காமல் இருக்க காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தங்கள் செல்லும் பேருந்தில் தங்கள் கல்லூரி தான் கெத்து என்ற பெயரில் வெத்து வேட்டு செயலில் ஈடுபடுவது தான் இந்த ரூட் தல பிரச்சனை. 

இந்நிலையில் பூந்தமல்லியில் இருந்து திருத்தணி செல்லும் பேருந்தில் இன்று காலை ரூட்டு தல யார் என்பதை தீர்மானம் செய்வது குறித்து மோதல் ஏற்ப்பட்டுள்ளது. இதனை செய்தது சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்த நிலையில், கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி வாசலிலையே 4  மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய சோதனையில் 8 பட்டாக்கத்திகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்