Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கணும்:- வலுக்கும் சர்ச்சை...!

Bala July 05, 2022 & 16:51 [IST]
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கணும்:- வலுக்கும் சர்ச்சை...!Representative Image.

தமிழ்நாட்டை ரெண்டா பிரிக்கணும்னு நினைச்சா பிரிச்சிடுவோம், பாண்டியநாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் என பாஜகவின் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தை சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

பாஜகவினர் தமிழகத்தில் தங்களுடைய இருப்பை காட்டிக்கொள்ள அவ்வப்போது ஏதையாவது பேசிவிட்டு செல்வதாக பல அரசியல் தலைகள் கூறி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற குண்டை துக்கி போட்டனர். அந்த வகையில் தற்போது பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரான் நாங்கள் நினைத்தால் தமிழகத்தை இரண்டாகப் பிரித்து விடுவோம், பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று தமிழகத்தை இரண்டாக பிரித்து விடுவோம் என தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், என்ன காரணத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறுகிறார்?  தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை எழுந்திருக்கிறதா?  403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தையே பிரிக்க முடியவில்லை என்றும், மத்தியில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிகார போதையில் பேசுகிறார்கள் நயினார் நாகேந்திரன் பேசுவதாக காட்டமாக தெரிவித்துள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்