தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு பதிவாகவில்லை என சென்னை, விமான நிலையத்தில் ஆய்வுக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை பதிவாகவில்லை என்றும், விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் அதிகரித்து வருகிறது குறிப்பிட்ட 63 வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் குரங்கம்மை பரிசோதனை செய்யப்படுவதாக அமைஇச்சர் குறிபிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஓரிரு நாளில் முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…