அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை தனியார் ஹோட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என அறிவித்துகொண்ட எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாலும், எதிர்கட்சித்தலைவர் வீடு அரசுக்கு சொந்தமானது என்பதாலும், எம்எல்ஏக்கள் கூட்டம் , சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் நாளை மாலை நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும், தேர்தல் ஆணைய நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…