குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்த நாளையொட்டி, ராஜ்பவனுக்கு சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சால்வை அணிவித்து, புத்தகம் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக முதல்வர் ஸ்டாலினுடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர். இதனைதொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்திலும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பல ஆண்டுகள் நம் நாட்டுக்காகத் தாங்கள் தொண்டாற்ற வேண்டும் என்று விழைகிறேன். நேர்மையும், ஆழ்ந்த அறிவும், எத்தகைய சூழலிலும் சிறிது நகைச்சுவை நயமும் நிறைந்த தங்களது புகழ்மிக்க வாழ்க்கையானது பொதுவாழ்வில் இருக்கும் எங்கள் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…