கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஸ்டாலின் நாளை வீடு திரும்புகிறார்.
சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதையடுத்து அவர் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுவதும் குணமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது
இந்நிலையில், சிகிச்சை முடிந்து நாளை முதல்வர் வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருவாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் அவர் சில நாட்களுக்கு வீட்டிலிருந்தே பணிகளை கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…