சுமார் 2 வருடமாக மிரட்டி வந்த கொரோனா காலாவதியான நிலையில், தற்போது ஆபத்தான குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மகாணத்தில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும், தனது ஆக்டோபஸ் கரங்கள் உலக்கியது. உலகத்தையே அமெரிக்கா தான் காப்பற்றும் என்று ஹாலிவுட் படங்களில் காட்டப்பட்டு வந்த நிலையில், கொரோனா அதனை பொய் என்று நிரூபித்தது. மேலும் வல்லரசு நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த வைரசில் இருந்தே இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது அம்மை நோய் போன்ற அறிகுறிகளுடன் குரங்கு காய்ச்சல் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் கனாடாவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கனாடாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்துள்ள ஒருவருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பொதுபோக்குவரத்தை பயன்படுத்தியுள்ளதால் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…