யாரோ ஒருசில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி, அனைவரும் வளர்வதுதான் வளர்ச்சி என ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஈரோட்டில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். ரூ.183.70 கோடி மதிப்பீட்டில் 1,761 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின், ரூ.261.57 கோடி மதிப்பில் 135 முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், யாரோ ஒருசில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி, அனைவரும் வளர்வதுதான் வளர்ச்சி என்றும், இந்தியாவுக்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், பல்வேறு மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றதாகவும், பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம் என்றும், இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…