அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் திரையிடல் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்கள் பின்னாளில் தொழில் கலைஞர்களாக வருவதாற்கான வாய்ப்புக்களை உருவாக்கி தரும் வாய்ப்பில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
அந்த வகையில், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திரையிடல் திட்டம் ஒன்றை சிறார் திரைப்பட விழா என்ற பெயரில் வகுத்துள்ளது. இந்த காட்சி ஊடக திட்டத்தின் மூலம் உலகத்தை புதிய கோணத்தில் மாணவர்களை காண வைப்பதும், வாழ்வியல் நற்பன்புகளை மேம்படுத்துவதுமே இந்த திட்டத்தின் முக்கியம் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…