தமிழக அரசானது சத்தமில்லாமல் அரசு உதவிப் பெறும் பள்ளிகளை மூடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் கல்வி பயின்றால் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மருத்துவத்திற்கு செல்லும் என்று முதலில் அறிவித்தது, அதனைத்தொடர்ந்து அரசு பள்ளியில் கல்வி பயின்றால் மட்டுமே 7.5% பொறியியல் விவசாயம் போன்ற கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று அறிவித்தது, அதேபோன்று அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 20 சதவீத வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது, அரசு பள்ளியில் கல்வி பயின்ற மாணவிகளுக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உயர்கல்வி பயிலும் போது வழங்கப்படும் என அறிவித்தது . அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி கிடையாது என அறிவித்தது, இந்த அனைத்து நிகழ்வுகளையும் சற்று சிந்தித்து பார்க்கும்போது , அரசின் எந்த உதவியும் கிடைக்காத ஒரு மாணவன் எவ்வாறு அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்து கல்வி பயில்வான் ?. ஓர் அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறையும்போது அங்குள்ள ஆசிரியர் வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றார். மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டால் அந்தப் பள்ளியை நிர்வாகம் மூடி தனியார் (மெட்ரிகுலேஷன் ) பள்ளியாக மாற்றிவிடுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…