உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் இன்று உயர் அழுத்த வயரில் பட்டு மின்சாரம் தாக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மிலாது நபியை முன்னிட்டு, உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் நகரின் நன்பராவின் மசுக்பூர் பகுதியில் இருந்து, பராவாஃபத்துக்காக பலர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் செல்பவர்கள் மீது உயர் அழுத்த கம்பி பட்டவுடன் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர்.
மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…