இங்கிலாந்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தனது பிறப்புறுப்பின் உட்புறத்தை அளவிட பாலியல் ரீதியில் யு.எஸ்.பி கேபிள் கொண்டு விநோதமான முறையில் அளவிட முயற்சி செய்திருக்கிறான். ஆனால், அந்த யு.எஸ்.பி கேபிளோ சிறுவனின் உறுப்பிற்குள்ளேயே முடிச்சு போட்டபடி சிக்கியிருக்கிறது. இதனால், சிறுவனின் சிறுநீரில் ரத்தமும் வரத் தொடங்கியிருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார் மருத்துவரிடம் அழைத்துச் சென்றியிருக்கிறார்.
அப்போது ரூலரை கொண்டு அளவிடாமல் வேண்டுமென்றே யு.எஸ்.பி கேபிளை கொண்டு உள்ளே செலுத்தியதாக சிறுவன் மருத்துவர்களிடம் ஒப்புக்கொண்டுள்ளான். அதன்படி, சிறுவனை பரிசோதனை செய்ததில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எந்த பிரச்சனையையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிய வந்திருக்கிறது.
யு.எஸ்.பி கேபிளின் இருபுற போர்ட்களும் சிறுவனின் சிறுநீர்க்குழாய் பகுதியில் நீண்டுக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஏகப்பட்ட முடிச்சுகள் போடப்பட்ட கம்பியின் நடுவில் சிறுநீக்குழாய் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, கேபிளை வெளியே எடுக்க வடிகுழாய்கள் பொருத்தப்பட்டு பிறப்புறுப்புக்கும், ஆசனவாய்க்கும் இடையே செருகி, வெளிப்புற சிறுநீக்குழாய் வழியாக வெற்றிகரமாக கேபிளை அகற்றினர். இந்த விநோத சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்திருக்கிறது. இருப்பினும், இந்த கேஸ் தொடர்பான விவரத்தை சயின்ஸ் டைரக்ட் அறிக்கையில் சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் எழுதியிருக்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…