சாப்பாடு சரியில்லை என ஹோட்டல் மேலாளரை பாஜக எம்.எல்.ஏ தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹிங்கோலி மாவட்டத்தில் அந்த பகுதி எம்.எல்.ஏ., சந்தோஷ் பங்கர் என்பவர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மதிய உணவு சரியில்லை என்று அப்ப்குதி தொழிலாளர்கள் அவரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து உணவு வழங்கும் இடத்திற்கு நேரடியாக சென்ற எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்.
வழங்கப்படும் உணவை கண்ட எம்.எல்.ஏ., அந்த உணவில் பூச்சிகள் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். அவர், அந்த உணவகத்தின் மேலாளரை சட்டென்று கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…