Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் :- பீதியில் மக்கள்...!

Bala August 17, 2022 & 16:15 [IST]
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் :- பீதியில் மக்கள்...!Representative Image.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நேற்றைய தினம் ஒரு மணி நேரத்தில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும்,  இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இரவு 08.58, 09.34 மற்றும் இரவு 09.42 மணியளவில் முறையே 3.4, 2.1 மற்றும் 1.9 என்ற அளவில் மூன்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. இந்த  லேசான நடுக்கம் திண்டோரி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உணரப்பட்டது, இதனால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டது.

முதற்கட்ட தகவல்களின்படி, திண்டோரி தாலுகா, திண்டோரி, மட்கிஜாம்ப், ஹட்னூர், நீல்வண்டி, ஜம்புட்கே, உம்ராலே, தலேகான் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்