ஒரு இ-ரிக்ஷா ஓட்டுநர் தனது வாகனத்தை எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணின் மீது மோதுவிட்டார். இது ஒரு சிறிய விபத்துதான். அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணுக்கு எந்த பெரிய காயமும் ஏற்படவில்லை.
இருப்பினும் அந்த பெண் ரிக்ஷா ஓட்டுநரை சரமாரியாக திட்டி, பொது இடத்தில் வெறும் 90 விநாடிகளுக்குள் 17 முறை கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும், டிரைவருடைய மொபைல் ஃபோன் கைப்பற்றியதுடன், கொஞ்சம் பணத்தையும் அவரிடம் பறித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.
இதை பார்த்த அருகில் இருக்கும் மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலர் அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளான அந்த ரிக்ஷா ஓட்டுநர் நொய்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…