லடாக்கில் ஒரு மாத காலம் தங்கியிருந்த பிறகு, திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) டெல்லிக்கு வரவுள்ளதாக லடாக் புத்த சங்கம் தெரிவித்துள்ளது. 3 வருட இடைவெளிக்குப் பிறகு டெல்லிக்கு வரும், தலாய் லாமா அரசியல் தலைமையுடன் அவர் ஏதேனும் சந்திப்பு நடத்துவாரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
லேவில் உள்ள துப்ஸ்டன்லிங் கோன்பா, டிஸ்கிட் சாலில் ஒரு புதிய கற்றல் மையத்தைத் திறந்து வைத்து பேசிய திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா; காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன லடாக்கியர்கள் மீண்டும் லாசாவுக்குச் செல்லக்கூடிய காலம் வரும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது; திபெத்திய மொழி பேசும் அனைத்து பகுதிகளிலும் நமது அடையாளம், மொழி மற்றும் வளமான பௌத்த கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளோம்" என்றும் தெரிவித்தார்.
மேலும், லாசாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தை மிகவும் அமைதியை விரும்பும் மக்கள் என்று கூறிய தலாய் லாமா, 1959 க்கு முன்பு லாசாவில் வாழ்ந்த சில முஸ்லீம் பெண்களை தான் சந்தித்ததாகவும், அவர்களில் பலர் சரளமாக திபெத்திய மொழி பேசுவதாகவும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…