Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு பள்ளிகளில்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

Sekar July 10, 2022 & 14:16 [IST]
அரசு பள்ளிகளில்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!Representative Image.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்றாற் போல் கூடுதல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிக அளவில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் கொண்டு நிரப்ப சமீபத்தில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன் படி விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 28,984 பேர் மட்டுமே என நேற்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று கும்பகோணம் அருகே திப்புராஜபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தைத் திறந்து வைத்தபின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

அப்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், அதற்கு ஏற்றார் போல் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்