தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக அங்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் இயங்கி வந்த எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவிய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…