44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா நடைபெறுவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான இன்று, விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 28-ம் தேதி ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்ப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆக.27 ம் தேதி சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிக்கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…