தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கான மாதாந்திர ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
தமிழக அரசு முன்பு செயல்படுத்தி வந்த தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட சில திட்டங்களை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் புதிய பெண்கல்வி திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதன் படி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி படிக்க சென்றால் மாதம் ரூ.1,000 உதவித்தொகை மாணவிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…