அமெரிக்கா உகரைனில் உயிரியியல் ஆயுதங்களை உருவாக்குவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 150 வது நாளை கடந்து இன்னும் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் அமெரிக்கா உயிரியியல் ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும், உக்ரைன் நெருக்கடிக்கு அமெரிக்காவின் கொள்கையே காரணம் என வடகொரியா அரசு செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) தெரிவித்துள்ளது. உயிரியியல் ஆயுதங்கள் தொடர்பாக ரஷ்யா கடந்த மார்ச் மாதம் ஐநா சபையில் இதே குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், தற்போது வ்டகொரியாவும் இதே குற்றச்சாட்டியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…