பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் சில நாட்களுக்கு முன்பு மிரட்டும் தொனியில் வீடியோ போட்டு வைரலாக நிலையில், நேற்று பவ்யமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
பைக்கில் அதிவேகமாக சென்று அதை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிடுவதன் மூலம் இளைஞர்கள் குறிப்பாக 2k கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் டிடிஎப் வாசன்.
இவர் சமீபத்தில் டிக்டாக் பிரபலமான ஜிபி முத்துவை பின்னே அமரவைத்து, விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று வீடியோ எடுத்து போட்ட நிலையில், கோவையில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே டிடிஎப் வாசன் மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்த நிலையில், அவர் தனது தவறை ஒப்புக் கொண்டதாக கூறியதை அடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் வேகமாக சென்றது தவறு தான். இனி எனது வேகத்தை குறைத்துக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ள டிடிஎப் வாசன், அனைத்து வழக்குகளையும் முடித்துக் கொண்டு லடாக் செல்ல உள்ளதாக மேலும் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…