திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை ரூ.10க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராம பகுதிகள், வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர், ஒட்டன்சத்திரம், பழனி, ஆகிய பகுதிகளில் நுற்றுக்கணக்காண ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெறுவதால் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
இதனையடுத்து வரத்து அதிகரிப்பாலும், தேவை குறைவாலும் தக்காளி விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி நேற்று ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையானது. அதாவது ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டில் அதிகபட்சமாக ரூ.5-க்கு விற்பனையானது. இதை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…